Sunday, August 2, 2009

ஒரு மழைகால இரவுப் பொழுது...




குளுமையான காற்று அதன் ஈரப்பதத்தால் ஒரு மெல்லிய மயக்கம்
நானும் என் ஜன்னல் ஓர மரங்களும் அதன் ரசிகனாய்
இமைகள் மூடி மனதின் அடியில் ஓடும் சிந்தனைகளை
எழுதுகோலின் நுனியில் இழுக்க முயற்சிக்கிறேன் முடியவில்லை

எதாவது எழுத தோன்றுகிறது என்ன எழுத எதைப் பற்றி எழுத ?????
மிக நீண்ட மௌன இடைவேளைக்குப்பிறகு வான்மீது இருத்த பார்வை
சுற்றம் மீது திரும்பியது ஒரு வாகன சத்தம் அலுவலக அலுவல்
முடித்து வீடு திரும்பிய என் சுற்றத்தார்.

வழக்கம்போல் இன்றும் வெகு நேரமாக தட்டியும் திறக்கப்படாத
பக்கத்துக்கு வீட்டு கதவு இன்றும் அதே கெட்டவார்த்தை
உமிழப்படுகிறது. குளிர்த இரவை மதுவுடன் கழிக்க நண்பர்குழு மொட்டை மாடி யேரும் சத்தம். நான் மட்டும் காற்றின் ஈரப்பத மயக்கத்தில்

தூரத்து ஜன்னல் ஒன்றில் ஒரு தாய் இரவு உணவு வேலை
முடித்து சமையல் அரை சுத்தம் செய்கிறாள்.
வழக்கமாக நடப்பவை தான் ஏனோ
இன்று மட்டும் எனக்கு புதிதாக

திடீரென தூரத்தில் பளிச் வெளிச்சம் அழகாய் கோடுகள் கிழித்து விட்டு
வானுள் மறைத்து கொள்கிறது மின்னல்.
மீண்டும் ஒரு நிசப்த அமைதி படர்கிறது
காற்றின் வேகம் சற்று அதிகமாக அதிகமாக மெல்ல இமை மூடுகிறது
எழுதுகோல் என் விரல் விட்டு விடைபெறும் நேரம்
மனம் களிவுற்ற ஒரு மழைகால இரவுப் பொழுது.......

முஹம்மது அனஸ்

Thursday, July 9, 2009

என் முதல் க(விதை)

என்னுரை

இது என்னுள் பல முறை தோன்றி மறைத்த கேள்விகள் சில நேரங்களில் மின்னலாய் பளிச்சிட்டு மறையும் சில நேரங்களில் இடியாய் அதிர்வதையும் உணர்கிறேன். இப்படிபட்ட தருணக்களில் தான் நான் பல முறை நனைக்கப்படுகிறேன். இனி இதன் ஈரம் உலர்வதுமில்லை உலரப்போவதுமில்லை.

இதில் உள்ள எல்லாம் நான் கவிதை என்று சொல்லபோவதில்லை ஒரு சங்கீத வித்துவான் தன் கண்முன்னே நடக்கும் கற்பழிப்பை காண நேரும் போது கத்தாமல் இருக்க முடியாது அந்த கத்தலில் சங்கீததின் இலக்கணத்தை எதிர்பார்க்கமுடியது.

இந்த படைப்பில் பொரும்பான்மை அத்தகைய கத்தல்தான்.


காணுதற்கரியோன்

விரிக்கப்பட்ட இந்த பிரபஞ்சம் இதில்
விதைக்கப்பட்ட நாம். காரணமின்றி
ஏதுமில்லா இவ்வுலகில் இந்த பகுத்தறிவீனம்
மட்டும் எப்படி தான்தோன்றிகளாக
வாழ்திடும்?

சிந்தித்ததுண்டா ஏன்? எதற்காக? இந்த பயணம்
எதில் இதன் முடிவு?
"நெருப்பில்லா புகையில்லை"
என்ற சிந்தனை சில நேரங்களில்.

ஏன்? இத்தனை கதாபாத்திரங்கள்
சில காலம் மழலையாய்
சில காலம் பாலகனாய்
சில காலம் பருவனாய்
சில காலம் பெற்றவனாய்
முடிவில் முதிவுடன் முடிகிறது
இந்த நாடக அரங்கேற்றம்.

யாதும் ஊர் தான் யாவரும் கேளிர்(கிளையினர்) தான்
ஒன்றே குலம் தான் ஒருவனே தேவன் தான்
இது யாருக்கு இங்கு உரைக்கிறது
ஒரு மாபெரும் வாழ்வியலுக்கான
தேடலின் முடிவு இதில் இருக்கிறதேன்று.

படைப்புகள் (நீ, நான், நாம், இந்த பிரபஞ்சம்)
உண்மையென்றால் படைத்தவனும் உண்மையே.
படைப்புகள் படைத்தவனை அறிந்திட முடியா
அதற்கான நேரம் வரை.

இதோ உன் பயணம் முடிந்து உனக்கான ஊதியம்
கணக்கிடப்படும் நாள் வெகு தூரம்மில்லை
திறக்கட்டும் உனக்கான தேடலின் கதவு.

ஒன்று மட்டும் நிச்சயம் படைத்தவன் தன்னை
ஒருபோதும் படைப்புகளாக காட்டிக்கொண்டதில்லை
உறுதியாக மனிதனாக இல்லை என்றும் அவன்
காணுதற்கரியோன்.

முஹம்மது அனஸ்

Friday, May 8, 2009

பிறந்த நாள்...

அரும்புதல் எப்போதும் அழகானது
பூக்களின் மென்மையில்
பூரிக்காதவர்கள் இருப்பது கடினம்…

மனிதனின் பிறப்பும்
மலரின் அரும்புதல் போல்தான்…
ஆனால்
மழலையாய் இருக்கும்போது மட்டுமே
மென்மையாய் இருக்கின்றோம்.

வளர்ச்சியின் வேகத்தில்
மென்மையை இழக்கின்றோமா?!…
மறக்கின்றோமா?!…
எதுவோ ஒன்று…
ஆனால்
நாம் இறுகிப்போகின்றோம்..
காலவெள்ளத்தில் சிக்கிய
கல்லாக இறுகிப்போகின்றோம்…

காற்றின்
வேகத்தில் சிக்கி தவிக்கும்
இலைகளாக கிழிபடுகின்றோம்…

போதும் போலி புன்னகை முகமூடி
கிழித் தேறிவொம்.
கபடம் மில்லா மழலை
அகம் கொள்வோம்...